Tuesday, October 6, 2015

☞ சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 7



• சூக்கும தேகம்

♋ [முன்னைய சைவசித்தாந்த ஸாரம் தத்துவ விளக்கப்  பகுதியில் கூறப்பட்ட] முப்பத்தியொரு தத்துவங்கள் அடங்கியது சூக்ஷ்மதேகம் என வழங்கப்படுகிறது; இது ஒவ்வொரு ஆன்மாவிற்கும் தனித்தனியே வேறுபட்டது. முப்பது தத்துவங்கள் பற்பல புவனங்களில் உண்டாகும் உடல்களுக்கும் அவற்றிற்கு ஆதாரமாக விளங்கும் பற்பல புவனங்களுக்கும் ஆதாரமாக அமைவது; இவை எல்லா ஆன்மாக்களுக்கும் பொதுவானவை. இவையெல்லாவற்றிற்கும் காரணமாயிருப்பது அசுத்த மாயை; இது அழிவற்று எக்காலமும் இருப்பது; வியாபித்திருப்பது; எல்லா ஆன்மாக்களின் கருமங்களுடனும் தொடர்புடையது; தன்னுடைய தொழிலால் ஆன்மாக்களை மோஹமடையச் செய்வது.

• சுத்த தத்துவங்கள்

♋மேல் கூறிய தத்துவங்களுக்கு மேல் முப்பத்திரண்டாவது தத்துவம் சுத்தவித்தியை எனப்படும்; அதற்கு மேல் ஈசுவர தத்துவம் முப்பத்தி மூன்றாவது.

♋இந்த சுத்தி வித்தியை தத்துவத்தில் ஸப்தகோடி மஹாமந்திரங்கள்,காமிகம் முதலான இருபத்தெட்டு ஆகமங்கள்(=ஸம்ஹிதைகள்) சைவ சித்தாந்த சாஸ்த்திரங்களினால் போற்றி வணங்கப்படும் நந்தி முதலான எட்டு கணேசுரர்கள், இந்திரன் முதலான எட்டு லோக பாலகர்கள், அவர்களது ஆயுதங்களான வஜ்ரம் முதலானவை இருக்கின்றன. ஈசுவர தத்துவத்தில் அனந்தர் முதலான வித்தியேசுவரர்கள் இருக்கின்றனர்.

சுபம்

No comments:

Post a Comment