Tuesday, October 6, 2015

சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 5



• அஹங்கார சிருஷ்டி

1. புத்தி தத்துவத்தில் இருந்து சாத்வீகம்,இராஜஸம்,தாமஸம் என [மூன்று]வகைப்பட்ட அஹங்காரம் தோன்றுகிறது.

2. சாத்வீக அஹங்காரத்தில் இருந்து மனம்,செவி முதலிய ஐந்து அறிவுப் புலன்கள் தோன்றும்.

3.  இராஜஸ அஹங்காரத்தில் இருந்து வாக்கு முதலிய ஐந்து தொழிற் கருவிகள் தோன்றும்.

4. தாமஸ அஹங்காரத்தில் இருந்து நாற்றம் முதலிய ஐந்து தன்மாத்திரைகள் உண்டாகும். இவ்வைந்து தன்மாத்திரைகளில் இருந்து மண் முதலிய ஐம்பூதங்கள் தோன்றுகின்றன. இவ்வைந்து பூதங்களின் செயல்கள் முறையே எல்லாவற்றையும் தாங்குதல், ஒருசேர வைத்திருத்தல், எரித்தல், பொருள்களின் உறுப்புகளோடு ஒரு சேர இணைத்திருப்பது, எல்லாப் பொருள்களுக்கும் இருப்பிடம் அளித்தால் ஆகியன.

• குணதத்துவம்

1. இருபத்திரண்டு தத்துவத்திற்கு அப்பாற்பட்டு விளங்கும் புத்திதத்துவத்திற்கு காரணமான குண தத்துவமானது[இருபத்துநான்காம் தத்துவம்] ஸத்துவம்,இராஜஸம்,தாமஸம் என மூன்று பகுப்புக்களைக் கொண்டது;[இது] சுகம்,துக்கம்,குழப்பம் முதலியவற்றுக்குக் காரணமாக உள்ளது.[இது] இருபத்தி நான்காவது தத்துவம்.

2. குணதத்துவத்திற்கு காரணமாக விளங்கும்.பிரகிருதி தத்துவமானது இருபத்தியைந்தாவது தத்துவம். புத்தி,குணம் ஆகியற்றில் பிரகிருதியின் காரியமாகக் கொள்ளப்படுவது  குணதத்துவமே. இக் குணதத்துவமானது சுகம்,துக்கம்,மன மயக்கம் முதலியவற்றிற்குக் காரணமாகவும், அதற்குக் கீழுள்ள புத்தி முதல் நிலம் ஈறாகவுள்ள இருபத்தி மூன்று தத்துவங்களுக்கும் காரணமாகவும் விளங்குகிறது. இவ்வாறான இருபத்தியைந்து தத்துவங்களும் அசுத்தாத்துவா என வழங்கப்படுகின்றன.

சுபம்

No comments:

Post a Comment