Monday, August 24, 2015

சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 3


• உடலும் ஆன்மாவும்
(முக்கியமானது)

I. இந்த ஸம்ஸாரத்தில் ஜாதி மற்றும் குலம் முதலிய உணர்வுகளுக்கு இருப்பிடமாகிய இந்த பருவுடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும்[ஐம்பூதங்களின்] பிரிக்க முடியாத சேர்க்கை.

II. இங்கு முற்பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பிராமணர் முதலிய நால் வருணங்களில் பிறப்பும், புலன்களின் செயல்ப்பாடும், அழகும், செல்வமும் பொருந்தி குறிப்பிட்ட ஓர் அளவு ஆயுளும், குறிப்பிட்ட ஓர் அளவு இன்பதுன்ப நுகர்ச்சியும் கொண்டதாக ஆன்மா அமைகிறது.

III. இவ்வான்மாக்கள் இன்பதுன்ப நுகர்ச்சியடையும் பொருட்டு ஒவ்வொரு சிருஷ்டியிலும் ஒவ்வொரு ஆன்மாவும் ஒரு புல் நுனியை விட்டு நீங்கி அந்தந்தப் பருவுடலைப் பற்றுவதும் பூதங்கள் முதல் கலாதத்துவம் ஈறான முப்பது தத்துவங்களடங்கியதுமான[சூக்ஷ்ம சரீரத்தைப்] பிரத்தியோகமாக ஒவ்வொரு பிறவியிலும் பெறுகின்கின்றன.

IV. அந்த ஆன்மாவினால் செய்யப்படும் புண்ணிய பாவங்களுக்கெல்லாம்[இந்த சூக்கும சரீரம் தான்] உறைவிடமாகும்.

V. ஆன்மாவானது பருவுடல், சூக்கும சரீரம் ஆகியவற்றினின்றும் தனித்து வேறுபட்டது; அறிவு மற்றும் செயல்திறன் கொண்டது; என்றும் நிலைத்து நிற்பது;உருவமற்றது; எங்கும் வியாபித்திருப்பது.

ஸம்ஸாரத்தில் உழலும் புருஷதத்துவமானது 
1. ஆணவம்,
2. கர்மம்,
3. மாயை,
4. பிந்து,
5. ரோதசக்தி 
என்னும் ஐவகையும் பாசங்களுக்குட்பட்டது.


சுபம்

No comments:

Post a Comment