Monday, August 17, 2015

சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 1

“சைவசித்தாந்த ஸாரம்” என்னும் தலைப்பில் அடியேன் சைவசித்தாந்த அடிப்படை விடயங்களை யாவரும் எளிதிலறியும் வண்ணம் சிறு சிறு பகுதிகளாகத் தர எண்ணியிருக்கிறேன். இதனை விளக்குமெனது தினமொவ்வொரு பதிவும் சைவசித்தாந்தம் பற்றியறியாதவர்களுக்கு ஒரு அடிப்படைத் தூண்டுகோலாக யிருக்குமென எண்ணுகிறேன். அவ்வகையில் இன்று சைவசித்தாந்த ஸாரத்தின் முதல் சிறு பதிவு இடம்பெறுகிறது..

சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 1

உலகத்திலுள்ள பொருள்கள்
  1. அறிவுள்ளன
  2. அறிவில்லாதன என இருவகைப்படும்.

அறிவுள்ளன இயக்குவன,அறிவில்லாதன இயங்குவன. இவ்விரண்டையும் சித்து என்றும், சடம் என்றும் முறையே கூறுப.

அறிவுள்ளன யாவும் தாங்களாகவே பொருள்களை அறிவனவல்ல. தாமே யாவற்றையும் அறியும் கடவுள் ஒருவர் அறிவிக்க, அவை அறியும். அக் கடவுள் சிவபெருமான்.
  • அறிவுள்ளன உயிர்கள்
  • அறிவில்லாதன உலகம்



சைவசித்தாந்த ஸாரம் - பகுதி 1 முற்றிற்று.

சுபம்

No comments:

Post a Comment