Sunday, November 13, 2016

உமையோர் பாகனும் பாகவதமும்!

விஷ்ணு புராணமாகிய பாகவதம்
விஷ்ணுவின் நவையைமறைத்து சிவபெருமையை
உரைத்தல்!

Note:- நவை= இழிவு, குற்றம், சிறுமை.

தேவர்கள், அசுரர்கள், மந்தரமலையை மத்தாக நாட்டிச் சமுத்திரத்தைக் கடையும்போது, மந்தரமலையானது வீழ ஆட்டம் காண, அப்போது விஷ்ணுவானவர் கூர்மவடிவெடுத்து மந்தரமலையை நிறுத்தினதும், கடலைக் கடையும்போது, இளைத்த அசுரரையுஞ் சுரரையுங் கடையாமல் நிறுத்தி, தான் ஆயிரங்கரத்தைப் பொருந்திக் கடலைக் கடைந்ததும் இவைகள் விஷ்ணுவிற்குப் பெருமையேயாம். விஷ்ணு ஆயிரங்கரங்களால் அதிக வேகத்தோடு கடலைக் கடையும்போது அங்கு வெளிப்பட்ட ஆலகால விஷத்தை அடக்கித் தேவர்கள் அசுரர்களைக் காவாமல் விட்டது விஷ்ணுவின் சிறுமையேயாம்!. விஷ்ணுவானவர் அவ்விடம் இருந்து புறப்பட்ட ஆலகாலவிஷத்தினால் தேவர்கள் அசுரர்கள் காணும்படி மூடப்பட்டு, அவ்வாலகால விஷமயமா யிருத்தல் விஷ்ணுவின் சிறுமையினுஞ் சிறுமையேயாம்!.

விஷ்ணுவின் புராணமாகிய நாலும் விஷ்ணுவின் நவையை(தவறு,இழிவை,சிறுமையை) மறைத்ததென்றது எதனால் எனின் கடலின்கண்ணிருந்து புறப்பட்ட ஆலகாலவிஷத்தைக்கண்ட தேவர்கள் அசுரர்கள் அஞ்சும்போது விஷ்ணுவானவர் அவர்களை நோக்கி நீங்கள் அஞ்சவேண்டாம் என்று சொல்லி வேகமாய்வந்த ஆலகாலவிஷத்திற்கெதிரே ஒருகணப்போது நின்று அதன் உக்கிரத்தை அடக்க, அவ்வாலகாலவிஷமானது அடங்காமல் தமக்கெதிரே வந்தெதிர்த்த விஷ்ணுவைமூடி மறைக்க விஷ்ணுவானவர் தேகமானது கருகப்பெற்று அந்த இடத்தைவிட்டு நீங்கி விரைவாக கயிலாயம் சென்று சிவபெருமானிடத்திலே அடைக்கலம்புகுந்து, உயிர்பெற்ற செய்தியையும், விஷ்ணுவானவர் அநேகமாகவே சிவபெருமானைத் துதித்துத் தம்மைக் கொள்ளவந்த ஆலகால விஷத்தையுண்டு எமது உயிரைக் காத்தருள வேண்டும் என்று துதித்ததையுமாம்.



வைஷ்ணவர் வாய்மத கண்டனம்!

விஷ்ணுவானவர் தேவர்களும் அசுரர்களும் ஆலகாலவிஷத்திற்கஞ்சித் தம்மைவிட்டு நீங்கிக் கைலாயத்திலே சென்று சிவபெருமானிடத்தில் அடைக்கலம் புகுந்து, அச்சிவபெருமானால் உயிர்பெற்றுய்ந்து தமது பக்கத்தின்கண் வருங்காறுந் காத்தல் தொழிலை நடத்திக் கொண்டிருந்தாரோ ?; அல்லது பரமேஸ்வரனையும், சிவாகமங்களையும், சிவசின்னங்களையும், சிவனடியார்களையும் நிந்தனை செய்கின்ற தமது அடியார்களாகிய வைஷ்ணவர்களுக்கு அருள் புரிந்துகொண்டிருந்தாரோ?; அல்லது, நமது பக்தர்களாகிய வைஷ்ணவப் பிணங்களைச் சுடுகின்ற சுடலையுள் நின்று கூத்தாடிய ருத்திரன் இருக்கும் கைலாயத்திலே தேவர்களும் அசுரர்களும் சென்றார்கள் என்று துக்கம் பொருந்தி இருந்தாரோ?; அல்லது தேவர்களும் அசுரர்களும் நஞ்சுக்கஞ்சி ஓடத் தாம் அந்த வேடிக்கையைப் பார்த்துக் கொண்டிருந்தாரோ?; அல்லது, திருப்பாற்கடலில் ஆதிசேடன் மீது நித்திரை செய்துகொண்டிருந்தாரோ?; அல்லது, ஸ்ரீரங்கம், திருப்பதி, திருவல்லிக்கேணி முதலாகிய திருப்பதிகளிலே தமது அடியார்களாகிய வைஷ்ணவர்கள் கொடுத்த புளியோதனம், ததியோதனம், வடை, தோசை, சர்க்கரைப்பொங்கல் ஆகிய இவைகளை உண்டு கொண்டிருந்தாரோ?; அல்லது, தமது புகழை விளக்கவந்த ராமானுஜர் வேதசூத்திரத்திற்குச் செய்த பாஷ்யத்தை வாசித்துக் கொண்டிருந்தாரோ ? இச்செய்திகளில் ஒன்றையாவது விஷ்ணுவின் புகழைக் கூறவந்த பாகவத புராணம் பேசாமல் இருந்தது வஞ்சகமோ?; அல்லது நூற் குற்றமுண்டாகுமென்றோ அறியேம்!.

மேல் பதிவிற்குப் பிரமாணமும், தேவர்களும் அசுரர்களும் பிரமனும் விஷ்ணுவும் ஆகிய இவர்கள் எல்லாம் வல்ல சர்வேஸ்வரனுடைய திருவருள்பெற்றுக் கடலைக் கடையாத காரணத்தினால் கொடிய ஆலகாலவிஷம் எழுந்தது என்பதற்குப் பிரமாணமும்:-
  •        பாகவதம்; கூர்மப்படலம்,
  •        உபதேசகாண்டம்;கூர்ம அவதாரப்படலம்,
  •        கந்தபுராணம்; ததீசி யுத்தரபடலம்.


'ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே சூழ்க' 

சுபம்

No comments:

Post a Comment